2021-22 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் (CMGFP) - 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2027 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்திற்கு இத்திட்டத்தின் 2-ஆம் கட்டத்தைச் செயல்படுத்த ரூ.9,06,54,810 ஒப்பளித்தல்.

2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - கரியமிலச் சமநிலை மையங்கள் - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் மூன்றாண்டுகளுக்குத் திட்ட ஒருங்கிணைப்பு பிரிவை (PCU) நிறுவுதல் - ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.

2025-2026 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்) அவர்களின் அறிவிப்பு - "தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட சுரங்கங்களை மீட்டெடுத்தல்" - விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.25 இலட்சம் ஒப்பளிப்பு - அனுமதி வழங்கப்பட்டது.

"இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்த தாக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீள்தன்மையை வலுப்படுத்துதல் (ADAPT4R)" என்ற திட்டத்தைச் செயல்படுத்துதல் - திரு. ஏ.ஆர். ராகுல் நாத், இ.ஆ.ப., இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை / முதன்மை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - இத்திட்டத்திற்கான தேசிய தகவமைப்புத் திட்ட வழிகாட்டுதல் குழுவில் (NAPSC) உறுப்பினராக நியமிக்கப்படுதல்.

"இராமநாதபுரத்தில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்த தாக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீள்தன்மையை வலுப்படுத்துதல் (ADAPT4R)" என்ற திட்டத்தைச் செயல்படுத்துதல் - திரு. ஏ.ஆர். ராகுல் நாத், இ.ஆ.ப., இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை / முதன்மை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - இத்திட்டத்திற்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுதல்.